வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (புதன்கிழமை)  கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின்  1700 வது நாளான இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது காணாமல் போனோரின் உறவுகளினால் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டித்தமை குறிப்பிடத்தக்கது.